முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அவர் கழுத்தில் மிளகாய் மாலை அணிந்தும் கழுத்தில் மிளகாய்களை கட்டி கொண்டும் கையில் பிச்சை பாத்திரம் ஏந்திய படியும் தண்டோரா போட்டுக் கொண்டு வந்தார். 100 மீட்டருக்கு முன்பு அவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் தேர்தல் விதிமுறையின் படி மிளாகாய் மாலையை கழட்டி விட்டு வேட்புமனு தாக்கல் செய்ய வருமாறு அறிவுறுத்தினர்.