என் அம்மாவை பார்த்தே 2 மாதம் ஆகிவிட்டது - அண்ணாமலை

sinoj

செவ்வாய், 26 மார்ச் 2024 (14:32 IST)
என் அம்மாவை பார்த்தே 2  மாதம் ஆகிவிட்டது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,   பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில்,   வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
 
பிரதமர் மோடி உள்ளிட பாஜக தலைவர்கள் மற்றும்  நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
வரும் மக்களவை தேர்தலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் போட்டியிடுகிறார்.
 
பிரசாத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அண்ணாமலை என் அம்மாவை பார்த்தே 2 மாதம் ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே இல்லை.என் அம்மாவை பார்த்தே 2 மாதம் ஆகிவிட்டது. இப்போது மாற்றம் இல்லை என்றால் எப்போதும் மாற்றமில்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். தொகுதிக்கு தேவையானதை டெல்லியில் சண்டையிட்டு பெற்றுத் தருவேன் என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்