தமிழக மக்கள் மோடியை நம்பத் தயாராக இல்லை : கனிமொழி

சனி, 6 ஏப்ரல் 2019 (20:08 IST)
அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, ஆழ்வார்  திருநகரி மற்றும் அங்குள்ள பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசியதாவது :
 
வரும் தேர்தலில் மதவாத  சக்திக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தல். மோடியை வீட்டுக்கு  அனுப்ப வேண்டும். தமிழகத்தில் புயல், வெள்ளம் வந்தபோது வராத மோடி இப்போது தேர்தலுக்கு முன்னதாகவே மூன்று மாதங்களுக்கு முன்னரே வந்துவிட்டார். இதுபோல் எத்தனைமுறை வந்தாலும் தமிழக மக்கள் அவரை நம்ப மாட்டார்கள் இவ்வாறு தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்