முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் திடீர் ரத்து! காரணம் இதுதான்!

செவ்வாய், 26 மார்ச் 2019 (07:41 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும் சட்டமன்ற இடைத்தேர்தலும் வருவதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் முக ஸ்டாலினும் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று காலை 8 மணிக்கு முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல்வரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று காலை மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 
 
இருப்பினும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் கூட்டணி கட்சி தலைவர்களான பிரேமலதா, தமிழிசை, ராம்தாஸ், அன்புமணி, உள்பட பல தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்