டெல்டா தொகுதிகள் திமுகவின் கோட்டையா?

வியாழன், 23 மே 2019 (09:44 IST)
நடைபெற்று வரும் பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் டெல்டா தொகுதிகளான தஞ்சாவூர், நாகபட்டிணம், மயிலாடுதுறை பகுதிகளில் திராவிட முன்னேற்ற கட்சி பெருவாரியான வாக்குகள் முன்னனியில் உள்ளது. 

இது நீண்ட காலத்திற்கு பிறகு டெல்டா பகுதிகள் திமுக கையில் கிடைத்துள்ளதற்கான அடையாளமாகவே பார்க்கப்படுகின்றன.
 
முக்கியமாக இதுவரையிலான நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே அதிமுக நாகப்பட்டிணம் தொகுதியில் வெற்றிபெற்றது போன தேர்தலில் மட்டும்தான். கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த அந்த பகுதியில் தற்போது திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி களம் இறங்கியிருப்பதால் அவர்களது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்