முடியலை... மூலிகை சிகிச்சைதான் வழி

புதன், 10 ஜூன் 2015 (14:29 IST)
தொடர் வேலை என்கிறார்கள். இரவு பகலாக நடிக்கிறார் அதுதான் இப்படி என்று விளக்கம் தருகிறார்கள். 
 
சமீபத்தில் நானும் பிஸ்தாதான் படப்பிடிப்பு முடிந்தது. அதையொட்டி படத்தில் நடித்தவர்கள் செல்பி எடுத்து வெளியிட்டனர். மூக்கும் முழியுமாக தென்னகத்தை பரவசப்படுத்திக் கொண்டிருந்த தாரகையின் முகம் அந்த செல்பிகளில் குண்டும் குழியுமாக இருந்தது. நிலவில் களங்கமா என்று அதிர்ச்சியடைந்தவர்களுக்கு தரப்பட்ட விளக்கம்தான் முதல் வரியில் நீங்கள் படித்தது.
 
மீண்டும் மூக்கும் முழியுமா மாறுவதற்காக தாரகை தனது சொந்த மாநிலத்துக்கு சென்று மூலிகை சிகிச்சை எடுக்கலாமா என்று யோசித்து வருகிறார். நாட்டுப் பிரச்சனையை இப்படி யோசித்து தள்ளிப் போடலாமா? புறப்படுங்க மேடம்.

வெப்துனியாவைப் படிக்கவும்