ஹஜ் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு

ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய பயணிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில ஹஜ் கழகத்தின் சார்பில் மொத்தம் 302 பேர் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி ஹஜ் பயணம் சென்றனர். அவர்கள் ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை சென்னை திரும்பினர்.

அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்காக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள 4,242 பேர் வரும் 15ஆம் தேதிக்குள் சென்னை திரும்ப உள்ளனர் என்று தமிழ்நாடு மாநில ஹஜ் கழக உறுப்பினரும், தலைமை அதிகாரியுமான கே. அலாவுதீன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்