போட்டிக்குப் பிறகு மும்பை இண்டியண்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், “அற்புதமாக இருந்தது. ஆரம்பத்தில் எங்களின் துவக்கம் வித்தியாசமானதாக, கடினமானதாக இருந்தது.
மேலும் ரோஹித் சர்மாவின் தலைமைப் பண்பை பற்றி கூறுகையில், “அவரை நீங்கள் ஒப்பீட்டு பார்த்தால், மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதற்கு, இன்று சிறந்த அணித் தலைவராக அவர் விளங்கினார். அவர் இப்போது அதிக தன்னம்பிக்கையோடு இருக்கிறார்.
அவர் மும்பை இண்டியன்ஸ் கேப்டனாக பொறுப்பேற்றதற்கு பிறகு நிறைய ஏற்ற, இறக்கங்களுடன் நிறைய சவால்களை சந்தித்து வந்துள்ளார். இந்த மாதிரியான சவால்கள் மட்டுமே சிறந்த கிரிக்கெட் வீரராகவும், திடமான நபராகவும் உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.