ஐபிஎல்-2020; ராஜஸ்தான் படுதோல்வி : மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !

செவ்வாய், 6 அக்டோபர் 2020 (23:33 IST)
ஐபிஎல் போட்டிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அனைத்து அணிகளும் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் யாருமே எதிர்ப்பாராத வகையில் போட்டியில் திருப்புமுனைகள் நடைபெறுவது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.

இந்நிலையில் இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. uஉ

இந்நிலையில் ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. பின்னர் 197 ரன்கள் இலக்குகள் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. வீரர்கள் சோபிக்காததால் அடுத்தது விக்கெட் சரிந்தது. ராஜஸ்தான் அணி 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது,

எனவே மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றினால் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்குச் சென்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்