தீவுத்திடலில் இன்னிசை நிகழ்ச்சி

வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:16 IST)
தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அண்ணா கலையரங்கத்தில் நாளை மாலை 6 மணி முதல் பிரபல பின்னணி பாடகர்கள் பங்கேற்கும் லஷ்மண் ஸ்ருதி குழுவினர் வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த இன்னிசை நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 31) மாலை 6 மணிக்குத் துவங்கி நள்ளிரவு 12.15 மணி வரை இடைவிடாது நடைபெற உள்ளது.

பொருட்காட்சி நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறுவர்களுக்கு 5 ரூபாயும் ஆகும்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் நகரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மாநகர சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டை கொண்டாட குடும்பத்துடன் வாரீர் என சுற்றுலாப் பொருட்காட்சி உங்களை அழைக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்