வரம்பு மீறி பேசிய ..Blue sattai” Maaran…. விஜய் சேதுபதி பட இயக்குநர் எச்சரிக்கை

சனி, 3 அக்டோபர் 2020 (22:47 IST)
தமிழ் சினிமாவில் நடித்து வரும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் க/பெ ரணசிங்கம்.  இப்படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படம் வேறெந்தப் படமும்  இல்லாத விதத்தில் இந்தி, தெலுங்கு கன்னடம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் #ZEE5 இணையவெளிதனில் வெளியானது.

இந்நிலையில் இப்படம் குறித்து புளூசட்டை மாறன் விமர்சனத்தைக் கூறியிருந்தார்.
இதற்கு இப்படத்தின் இயக்குநர் விருமாண்டி புளூ சட்டை மாறனை எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கவனம் பெறுவதற்காக வரம்பு மீறி பேசிய “Blue sattai” Maaran அவர்களே #KaPaeRanasingam குறித்த கருத்துகளை திரும்ப பெறாவிட்டால், தங்களுக்கு ஏற்பட உள்ள பக்கவிளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல ..!! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நெஞ்சில் உரமிருந்தால் உங்களோடு நேரலையில் க/பெ குறித்து விவாதிக்க நான் தயார் என்று சவால் விடுத்துள்ளார்.

கவனம் பெறுவதற்காக வரம்பு மீறி பேசிய “Blue sattai” Maaran அவர்களே#KaPaeRanasingam குறித்த கருத்துகளை திரும்ப பெறாவிட்டால்,
தங்களுக்கு ஏற்பட உள்ள பக்கவிளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல ..!! pic.twitter.com/ahkFFUaCAT

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்