திருமண தடைகளை நீக்கும் புதன் பகவான் வழிபாடு !!

புதன், 10 ஆகஸ்ட் 2022 (13:14 IST)
புதன்கிழமை என்றில்லாமல், நவக்கிரக புதன் பகவானை எந்தநாளில் வேண்டுமானாலும் வந்து வணங்கலாம். நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவார் புதன் பகவான்.


நவக்கிரகங்களில் புதன் பகவானும் ஒருவர். நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலமாகத் திகழ்வது திருவெண்காடு. சீர்காழிக்கு அருகில் உள்ளது இந்தத் திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர்.

புதன் பகவான் என்பவர் நமக்கு புத்தியில் தெளிவைக் கொடுக்கக்கூடியவர். புத்தியில் பலத்தைக் கொடுக்கக் கூடியவர். காரியத்தில் தெளிவைத் தந்தருளக்கூடியவர். புதன் பகவானை வணங்கித் தொழுதால், கல்வியில் மேன்மை கிடைக்கப் பெறலாம். தொழிலில் முன்னேற்றத்தைத் தந்தருளுவார் புதன் பகவான்.

வியாபாரத்தில் அபரிமிதமான ஏற்றத்தையும் மாற்றத்தையும் தருவார் புதன் பகவான். தொடர்ந்து புதன் கிழமைகளில் புதன் பகவானை வணங்கி வந்தால், திருமணத் தடை நீங்கும். முக்கியமான, நோய்களையெல்லாம் தீர்த்தருளுவார் புதன் பகவான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்