திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினரான பானு பிரகாஷ் ரெட்டி, இந்த விவகாரம் குறித்து பேசியபோது, கோயில் ஊழியர் ரவிக்குமார், உண்டியல் பணத்தை எண்ணும் இடத்தில் திருடியதாகவும், இதற்கு பல ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினார். இந்த கொள்ளையடிக்கப்பட்ட பணம், ஜெகன் மோகன் ரெட்டியின் தாதேபள்ளி அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.