வீடு கட்டும் முன்னர் செய்யப்படும் பூஜையில் முக்கியமான பகுதி வாஸ்து பூஜை. இந்த பூஜை செய்யப்படும் நாளே வாஸ்து நாள் என அழைக்கப்படுகிறது. மத்ஸ்ய புராணத்தின் படி, சிவபெருமான் அந்தகாசுரனை வதம் செய்தபோது, அவரது நெற்றியில் இருந்து விழுந்த வியர்வையால் ஒரு பூதம் தோன்றியது. அதன் தவத்தால், பூமியை விழுங்கும் சக்தி வந்தது. இதனை தடுக்க, தேவர்கள் அதை நிலத்தில் தள்ளி அழுத்தி வைத்தனர். அதனால், அது வாஸ்து புருஷன் என அழைக்கப்பட்டான்.
பூமியை தோண்டி கட்டடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் அவனுக்கே கிடைக்கும் என தேவர்கள் அருள் செய்தனர். வாஸ்து மண்டலம் என்பது, அவன் மேல் அமர்ந்த 53 தேவதைகளுடன் கூடிய சதுர வடிவம் கொண்ட அமைப்பு. இதன் நடுப்பகுதி பிரம்ம ஸ்தானம் எனப்படுகிறது.