இந்தத் திருக்கோயில் பல்லவ சோழர் காலத்தில் கட்டப்பட்ட பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். புராணக் கதைப்படி, சூரிய பகவான் ஒருகாலையில் தனது பிரகாசத்தை இழந்தபோது, அசரீரியின் வாக்குப்படி இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, நாகேஸ்வரரை வழிபட்டதினால் சாபவிமோசனம் பெற்றார்.
இன்றைய விழாவில், ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி, ஸ்ரீ பெரியநாயகி, நடராஜர் மற்றும் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் சூரிய பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழா முடிவில் தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.