திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டோக்கன் பெற்றால் அலிபிரி படிகள் வழி செல்ல வேண்டும்- தேவஸ்தானம்

சனி, 15 ஏப்ரல் 2023 (22:07 IST)
ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டோக்கன் பெற்றால் அலிபிரி படிகள் வழி செல்ல வேண்டுமென்று தேவஸ்தானம் கூறியுள்ளது.

ஆந்திர மா நிலம் திருமலையில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையால் கோயில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

இந்த நிலையில், இக்கோயிலில் அலிபிரி பூதேவி வளாகத்தில், அலிபிரி படித்துறை வழியாக திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்குதான் திவ்ய தரிசன டோக்கல் வழங்கப்பட்டு வருகிறது.

திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் அலிபிரிமெட்லா பாதையிலுள்ள கலிகோபுரத்தில் தரிசன டோக்கன் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிடில் அவர்களுக்கு உள்ளே அனுமதியில்லை.

திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் அலிபிரி படிகள் வழியே மட்டுமே திருமலைக்குச் செல்ல வேண்டும். வேறு வழியில் சென்றால் டிக்கெட் பயன்படாது என்று திருப்பதி தேவஸ்தானம்  கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்