இவ்விழாவை முன்னிட்டு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் பூஜைகள் ஆரம்பமாகும். அதன் பின், ஏப்ரல் 18ஆம் தேதி முதல், ஆலயத்துக்கு அருகிலுள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் கால யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளன.
அதன்பின் ஏப்ரல் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தூண்டுகை விநாயகர் கோபுர கலசத்திற்கும், காலை 10.15 மணிக்கு மூலஸ்தானத்திற்கும் மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெறும். அதன் பின், மகா அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும்.