மே 5ஆம் தேதி சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் எப்போது செல்லலாம்?

செவ்வாய், 2 மே 2023 (19:46 IST)
வரும் நான்கு மற்றும் ஐந்தாம் தேதி சித்ரா பௌர்ணமி நிகழ இருக்கும் நிலையில் அன்றைய தினம் கிரிவலம் எப்போது செல்லலாம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
சித்ரா பௌர்ணமி மே நான்காம் தேதி வியாழக்கிழமை இரவு 11:59 மணிக்கு தொடங்கி மே ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11 33 மணிக்கு நிறைவடைகிறது. 
 
எனவே ஐந்தாம் தேதி பௌர்ணமி கிரிவலம் செய்ய உகந்த நாள் என்றும் அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்றும் திருவண்ணாமலை கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்