உலகப் பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான ஆயத்த பணிகள் நாளை தொடங்குகின்றன. இதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி, நாளை காலை 6:00 மணி முதல் 7:30 மணிக்குள் நடைபெற உள்ளது.
விழாவின் தொடக்கப் பணிகளான பந்தக்கால் முகூர்த்தத்திற்காக, நாளை சம்பந்த விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட உள்ளன. பின்னர், புனிதநீர் தெளிக்கப்பட்ட பந்தக்காலுக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சகர்கள் அதனை ராஜகோபுரம் வரை சுமந்து வருவார்கள். அங்கு, பந்தக்காலுக்குத் தீபாராதனை காட்டப்பட்டு, பந்தக்கால் நடப்படும்.