தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றான தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், இந்த ஆண்டிற்கான ஆவணி பெருந்திருவிழா வெகு சிறப்பாக தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து வருகின்றனர். இந்த விழாவின் முதல் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது.
ஆவணி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, காலை வேளையில் மூலவரான மாரியம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. இரவு நேரத்தில், உற்சவரான முத்து மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பின்னர், சுவாமி புறப்பாடு மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, மனமுருகி அம்மனை வழிபட்டனர்.