முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் குறிப்புகள்.....!!

பசும்பால், பாசிப் பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்துாரி மஞ்சள் கலந்து முகத்தில் தடவுவதால் முகச்சுருக்கம் சரியாகும். முகம் பொலிவு பெறும்.
* பாசிபயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு கலந்த மேற்பூச்சாக பயன்படுத்துவதால் வேர்க்குரு கொப்புளங்கள் சரியாகும். முல்தானிமெட்டி பவுடர்,  பன்னீர் அல்லது வெள்ளரிக்காய் சாறு கலந்து தடவுவதால் வேர்க்குரு, கொப்புளங்கள் கட்டிகள் சரியாகும்.
 
* வறண்ட சருமம் சரியாக, தேன், பாலுடன் குங்குமப்பூ சிறிது கலந்து முகம் உடலில் தடவி குளிப்பதால் முகம் பளபளக்கும். எண்ணெய் வழியும் சருமத்திற்கு பாலில் குங்குமப்பூ கலந்து தடவி குளிப்பதால் சரியாகும்.
 
* எண்ணெய் முகம் உள்ளவர்கள் தக்காளி ஜூசை தொடர்ந்து தடவி வரலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் சருமத்தை இளமை  யாக வைத்திருக்கும்.
 
* சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப் பாகச் செயல்படுகின்றன. தயிர், வெண் ணெய் போன்றவற் றையும், சாதம்  வடித்த கஞ்சியுடன் பாலையும் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்க மாகும்.
 
* பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து வந்தால், சொர சொரப்பான சருமம் மிருதுவாகும். இந்த பேக் முகத்தில்  உள்ள ஈரப்பசையை தக்கவைக்கும்.


 
* பப்பாளி பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசிவந்தால், நிறம் கூடுதலாகும். நார்மலான சீதோஷ்ண நிலையிலேயே இதை செய்ய  வேண்டும்.
 
* கடலைமாவு, தக்காளி, வெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து முகத்தில் கை கால்களில் தடவி 15 நிமிடம் சென்று குளிப்பதால் முகம்    உடல் பளபளப்பாகும்.
 
* பச்சரிசி, வெட்டிவேர், எலுமிச்சை தோல், அருகம்புல், துளசி (காயவைத்து), பச்சைபயறு, கஸ்துாரி மஞ்சள், கடலை பருப்பு சேர்த்து அரைத்து  குளியல் பவுடராக உபயோகிக்க உடல் பளபளப்பாகும் வேர்க்குரு, அரிப்பு சரியாகும்.
 
* வில்வ பழம் சதை சிறிது, எலுமிச்சை சாறு 4 சொட்டு, தேன் கலந்து முகத்தில் பரு இருக்கும் இடத்தில் தடவுவதால் பருக்கள் உதிர்ந்து வடு தெரியாமல் சரியாகும். கருமை போய்விடும்.
 
* ஆரஞ்சு பழத்தோல் பசையோடு தேன், தயிர் கலந்து முகத்தில் 15 நிமிடம் தடவி குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளபளப்பாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்