4 நாள் சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (10:45 IST)
இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிந்து கொண்டிருந்த நிலையில் இன்று வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை அன்று சந்தை சற்றே உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பங்கு சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்  55 புள்ளிகள் உயர்ந்து 66295 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 4 புள்ளிகள் உயர்ந்து 19,746 என்ற புள்ளிகளில் வர்த்தக மாறி வருகிறது. 
 
நான்கு நாள் சரிவருக்கு பின்னர் இன்று ஐந்தாவது நாளில் பங்கு சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்