அதன்படி, கடன் நிலுவை மற்றும் கிரெடிட் கார்டு பண நிலுவைகளை திருப்பித்தராதவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் மற்றும் நடத்தை மற்றும் பின்னணி சரியில்லாதவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கடன் பெற்றவர்களின் விவரங்களை பராமரிக்கும் "சிபில்" நிறுவனத்தை விண்ணப்பதாரர் அணுகி, தன்னைப் பற்றிய மதிப்பீட்டை தெரிந்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறும் ஸ்டேட் வங்கி அறிவுறுத்தியுள்ளது.