ஜியோ இலவச சேவை அடுத்த மாதம் வரை நீட்டிப்பு

வெள்ளி, 31 மார்ச் 2017 (21:17 IST)
இன்றுடன் முடியும் என அறிவித்திருந்த ஜியோ இலவச சேவை அடுத்த மாதம் 15ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


 
ஜியோ இலவச சேவை இன்றுடன் முடியவடையும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டண சேவை என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த இலவச சேவை ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை சுமார் 7 கோடி வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி ப்ரைம் உறுப்பினர்களாக மாறியுத்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மற்ற வாடிக்கையாளர்கள் ஜியோவின் ப்ரைம் உறுப்பினர்களாக சேர ஏப்ரல் 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் ரூ.303 ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதத்திற்கு இலவசமாக டேட்டா பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்