இனி, எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், வேறு வங்கி ஏடிஎம் மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் வர உள்ளது. இத்திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மூன்று வங்கிகளுக்கு இதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுபற்றி தேசிய பேமன்ட் கார்ப்பொரேஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வேறு வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்வது குறித்து பரிசோதனை முயற்சியாக 3 வங்கிகளில் செயல்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பரிசோதனை முயற்சி துவங்கும். டெபாசிட்டுக்கு ரூ.10,000 வரை ரூ.25, ரூ.50,000க்கு மேல் ரூ.50 சேவை வரியாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.