பி.எஸ்சி. நர்சிங்: 2ஆம் கட்ட கலந்தாய்வு துவக்கம்

வியாழன், 3 செப்டம்பர் 2009 (13:53 IST)
பி.எஸ்.சி, பி.பி.டி., பி.ஓ.டி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்கி வரும் 12ஆம் தேதி வரை நடக்கிறது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தின், தேர்வுக்குழு அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வு குறித்த கால அட்டவணை tnhealth.org மற்றும் tngov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்