ஆஹா! மானுஷி சில்லரின் கனவுத் திருமணம் முற்றிலும் கோலாகலமானதுதான்!

வெள்ளி, 8 ஜூன் 2018 (16:42 IST)
திருமணம் என்பது அனைவருக்கும், குறிப்பாக மணப்பெண்ணிற்கு மறக்கமுடியாத சிறப்பான நிகழ்வாகும்! ஏனெனில் அது அவள் வாழ்வின் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் நாளாயிற்றே! எனவே, மறக்க முடியாத அந்த நாளை, அவள் திருவிழா போன்று கொண்டாட வேண்டும் அல்லவா? நாங்கள் கூறுவது வண்ணங்கள், ஆடல், பாடல், அளவற்ற மகிழ்ச்சி, உற்சாகம், முக்கியமாக மணப்பெண்ணுக்கு ஏற்ற நகைகள்!
 
உலக அழகியான மானுஷி சில்லரின் கருத்தும் இதுதான். கரீனா கபூர் கானை மீண்டும் திருமணம் செய்ய தூண்டும் அளவிற்கு இது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று!
 
எப்படி என்று வியக்கிறீர்களா? உலக அழகி சில்லர் தனது கனவுத் திருமணத்தை கரீனாவிடம் விவரிக்கும் போது, அவர் நகைகளை அணிந்து கொண்டு நடனமாடுவதையும், பாடுவதையும், கோயிலுக்குள் செல்வதையும் அழகான காட்சியாக விவரித்தார். அவ்வளவு அழகான காட்சியை உணர்ந்த போது, திருமணத்தில் அவருடன் சாப்பிடும் கரீனா தன்னையே மறந்து உடனடியாக இவ்வாறு கூறினார் "வாவ்! எனக்கும் கல்யாணம் பண்ணனும் போல ஆசையா இருக்கு". அதற்கு பிறகு தான் கரீனா உணர்ந்தார் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று!

 
மானுஷி சில்லர் மற்றும் கரீனா கபூர் கான் முன்னிலையில், மலபார் கோல்டு அண்ட் டையமன்ட்ஸ் அதன் பிரைடல் ஜூவல்லரியின் பிரைட்ஸ் ஆஃப் இந்தியா சீசன் 6 என்ற பெயரில் லேட்டஸ்ட் டிசைன்களைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த டிசைன்கள், இந்திய மணமகள்களுக்காக மலபார் கோல்டு இதுவரை அறிமுகப்படுத்தாத சில சிறந்த வகை நகைகளின் தொகுப்பாகும். இந்தக் கண்கவர் டிசைன்கள், மானுஷியின் மனதிலேயே கனவுத் திருமணத்தை நிஜமாக்குவதற்கான ஆசையை விதைக்கும் என்பது உறுதி!
 
இது மட்டுமல்ல! வேறெந்த திருமணத்தைப் போல் இல்லாமல் கோலாகலமாக நடந்த உங்கள் திருமணக் கதையையும் நீங்கள் கூறலாம்! 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்