ராட்சசி சார், அவ பொம்பளையா ? புடவை கட்டின பிசாசு சார் ! என தன் மனைவியை பற்றி புலம்பும் கணவன்மார்கள் அனைவரும் சாபம் பெற்றவர்களே ! கணவன் பேசும் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத மனைவியை பெற்றவர்கள் எல்லாம் வரம் பெற்றவர்களே !கணவனிடமே பெண்ணுரிமை, பொறாமை, அலட்சியம், பேசும் மனைவியை பெற்றவர்கள் எல்லாம் சாபம் பெற்றவர்களே ! இன்னும் இந்த பத்திரகாளியை என் தலையில் கட்டிய என் அப்பனை சொல்லனும் என்று புலம்பாதவர்கள் எல்லாம் வரம் பெற்றவர்களே !
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ஆனால் உங்க அம்மா இப்படி பேசினா ? உங்க அக்கா அப்படி பேசினா ? என புலம்பும் மனைவியை பெற்றவர்கள் எல்லாம் சாபம் பெற்றவர்களே. இக்கட்டான தருணத்தில் நம்ம வீட்டுகாரர் தானே ஒரு வார்த்தை தானே, என அமைதி காக்கும் மனைவியை பெற்றவர்கள் எல்லாம் வரம் பெற்றவர்களே !
அவன் போடுற சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, சற்றும் நன்றி இல்லாமல் எங்க அப்பன் அதை பண்ணுனான் ! இதை பண்ணுனான் ! நீ என்னத்தை கிளுகிச்ச என கேட்கும் மனைவிகளை பெற்றவர்கள் மகா சாபம் பெற்றவர்கள். மொத்தத்தில் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.