மீண்டும் ஒரு டக் அவுட்… அடுத்தடுத்து ஏமாற்றிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!

vinoth

திங்கள், 15 ஜனவரி 2024 (07:46 IST)
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மொஹாலியில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்திய அணி சார்பாக சிவம் துபே 60 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் ஷர்மா ரன்னெதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.

இதையடுத்து நேற்று இந்தூரில் நடந்த போட்டியில் இந்திய அணி 173 ரன்களை சேஸ் செய்தது. இந்த போட்டியிலாவது ஹிட்மேன் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றும் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதன் மூலம் டி 20 போட்டிகளில் அதிகமுறை டக் அவுட் ஆன இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்