ஆனால் தற்போது அந்த தொடருக்கு டெண்டுல்கர்- ஆண்டர்சன் கோப்பை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாட்டைச் சேர்ந்த இரு ஜாம்பவான்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள ஆண்டர்சன் சச்சின் பெயருடன் தன் பெயரும் சேர்ந்திருப்பது கௌரவமானது எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தனிப்பட்ட முறையில் பிசிசிஐ –ஐ தொடர்பு கொண்டு “இந்த தொடருக்கு பட்டோடிக் கோப்பை என்றே பெயர் தொடர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. பட்டோடி குடும்பத்தினரின் கௌரவத்தை தொடரும் விதமாக அதே பெயரில் தொடர் நடத்தப்பட வேண்டும் என சச்சின் கேட்டுக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.