ஆனால் தற்போது அந்த தொடருக்கு டெண்டுல்கர்- ஆண்டர்சன் கோப்பை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாட்டைச் சேர்ந்த இரு ஜாம்பவான்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள ஆண்டர்சன் சச்சின் பெயருடன் தன் பெயரும் சேர்ந்திருப்பது கௌரவமானது எனக் கூறியுள்ளார்.
அதில் “நான் வளரும் காலங்களில் சச்சினின் பேட்ஸ்மேனாக பார்த்துதான் வளர்ந்தேன். கிரிக்கெட்டின் லெஜண்ட்டாகதான் நான் அவரைப் பார்த்து வருகிறேன். அவருடன் நான் நிறைய போட்டிகளில் ஆடியிருக்கிறேன். எனவே அவர் பெயருடன் என் பெயரும் சேர்ந்து கோப்பைக்குப் பெயர் வைக்கப்பட்டிருப்பது எனக்குக் கௌரவம்.” எனக் கூறியுள்ளார்.