இந்த ரன்னை வெச்சுட்டு ஒன்னும் பண்ண முடியாது! – தவறை ஏற்றுக்கொண்ட ரோகித் சர்மா

ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (13:09 IST)
நேற்றைய ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்தது குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து பேசியுள்ள மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா “நான் முடிந்தவரை பேட் செய்ய விரும்பினேன். ஆனால் தவறான நேரத்தில் வெளியேறி விட்டேன். நாங்கள் 50 ரன் வரை பார்ட்னர்ஷிப்பில் இருந்தோம். ஆனால் தவறான மோதலில் நான் அவுட் ஆனது எங்களுக்கு வலியை ஏற்படுத்தியது. சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடியதால்தான் இந்த ரன் வந்தது 151 ரன்னை வைத்து பந்துவீச்சாளர்களால் ஒன்றும் செய்ய இயலாது” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்