மீண்டும் ஜிம்முக்கு சென்ற ரிஷப் பண்ட்… மாஸாக வெளியிட்ட வீடியோ!

சனி, 6 மே 2023 (14:47 IST)
கடந்த மாதத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில், முதுகுப் பகுதியில், கால் முட்டியில் தசை நார் கிழிவு என சில இடங்களில் அடிபட்டுள்ளது. டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது. வாக்கிங் ஸ்டிக் உதவியோடு நடந்து வந்த இப்போது சுயமாக நடக்க தொடங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மீண்டும் ஜிம்முக்கு சென்று உடல்பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். இதுசம்மந்தமான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishabh Pant (@rishabpant)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்