இந்தியாவை பாகிஸ்தான் ஜெயித்தால் பிளாங்க் செக் தயாராக உள்ளது… ரமீஸ் ராஜா!

சனி, 9 அக்டோபர் 2021 (11:04 IST)
எதிர்வரும் டி 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வெற்றி பெற்றால் அந்த அணிக்கு முதலீட்டாளர்கள் வர தயாராக உள்ளதாக வாரியத்தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு சொந்த நாட்டிலேயே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு 50 சதவீத நிதி ஐசிசியிடம் இருந்துதான் வருகிறது. அதே போல ஐசிசியின் வருவாய் 90 சதவீதம் இந்திய சந்தைகளிடம் இருந்துதான் வருகிறது. அந்த நிதியை இந்திய அரசு தடுக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைத் தகர்க்க முடியும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் மூலமாக ஐசிசிக்கு எந்த வருமானமும் செல்வதில்லை. அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை வலுவாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். மேலும் அவர் ‘எதிர்வரும் டி 20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வெற்றி பெற்றால் ஒரு முதலீட்டாளர் பிளாங்க் செக் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்’ எனவும் பேசியுள்ளாராம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்