புலிக்கு பிறந்தது பூனையாகுமா? டிராவிட் மகன் 150 ரன் விலாசல்!!

புதன், 10 ஜனவரி 2018 (21:53 IST)
சச்சின் மகன் அர்ஜுன் தற்போது கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவது போல, ராகுல் திராவிட் மகன் சமித், சுனில் ஜோஷி மகன் ஆர்யன் ஜோஷியும் தந்தை வழியில் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி வருகின்றனர். 
 
கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பிடிஆர் கோப்பை யு-14 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் முன்னள் கிரிக்கெட் வீரர் திராவிட் மகன் சமித் 150 ரன்களை எடுத்து தன் அணியை வெற்றி பெற செய்துள்ளான். 
 
2015 ஆம் ஆண்டு யு-12 கோபாலன் கிரிக்கெட் தொடரில் சமித் சிறந்த பேட்ஸ்மெனாகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராகுல் திராவிட் தற்பொது நியூஸிலாந்தில் யு-19 உலகக்கோப்பை இந்திய அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்