டிராவை நோக்கி கான்பூர் டெஸ்ட்… நங்கூரம் பாய்ச்சிய நியுசிலாந்து!

திங்கள், 29 நவம்பர் 2021 (11:41 IST)
கான்பூர் டெஸ்ட்டின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் நியுசிலாந்து வீரர்கள் நிதானமாக விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடிவருகின்றனர்.

கான்பூரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற நியுசிலாந்து அணி கடைசி நாளில் 280 ரன்கள் எடுக்கவேண்டும். இந்திய பிட்ச்களில் இது அசாத்தியமானது. அதனால் போட்டியை எப்படியாவது ட்ராவாவது செய்துவிட வேண்டும் என்ற முடிவோடு விக்கெட்டை இழக்காமல் ஆடி வருகின்றனர். நேற்றே முதல் விக்கெட் வீழ்ந்திருந்த நிலையில் இன்று காலை முதல் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திண்டாடி வருகின்றனர்.

உணவு இடைவேளை வரை நியுசிலாந்து அணி 79 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்துள்ளது. இன்றைய முதல் செஷனில் இந்திய பவுலர்களால் ஒரு விக்கெடைக் கூட வீழ்த்த முடியவில்லை. இதனால் போட்டி டிராவை நோக்கி செல்ல அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்