இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு புதிய் கிட் ஸ்பான்ஸர் – பிசிசிஐ அறிவிப்பு!

புதன், 18 நவம்பர் 2020 (10:10 IST)
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கான புதிய கிட்களை வழங்க எம் பி எல் நிறுவனம் பிசிசிஐ யுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய ஆடவர் அணி, மகளிர் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிகளுக்கு கிட் ஸ்பான்சராக எம் பி எல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் நவம்பர் 2020 முதல் டிசம்பர் 2023 வரை என மூன்று ஆண்டு காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய அணியின் ஜெர்சி மற்றும் கிரிக்கெட் சார்ந்த பிற பொருட்களை விற்பனை செய்யும் உரிமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்