லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் லோகோ அறிமுகம்!

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (10:21 IST)
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் லோகோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள லக்னோ அணி மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த அணியில் கே எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தங்களுடைய சமூகவலைதளப் பக்கத்தை தொடங்கிய லக்னோ அணி தங்கள் அணிக்கு பெயர் சொல்லுமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதையடுத்து அணியின் பெயரை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்(luknow super giants) என அறிவித்து அணித் தலைவராக கே எல் ராகுலை நியமித்துள்ளது.

இந்நிலையில் இப்போது அணியின் லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. லோகோவின் மேல் பகுதியில் இந்திய் தேசிய கொடியின் வடிவம் போன்ற இறகு வடிவமைக்கப்பட்டு, அதன் நடுவில் நீல வண்ணத்தில் பேட் வைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்