கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகல்!

வியாழன், 16 செப்டம்பர் 2021 (18:25 IST)
சமீபத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகிறது.

இந்திய கேப்டன் விராட் கோலி குறைந்த இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீர்ர் என்ற சாதனை படைத்துள்ளார். அதேசமயம் அவரது தலைமையிலான இந்திய அணி அஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் வென்று சாதித்தது.

இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் 2 போட்டிகளில் வென்றது. அடுத்து, அவரது தலைமையிலான ஆர்.சி.பி அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றிவாகை சூட பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

மேலும், விரைவில் டி-20 உலகக் கோப்பை  தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் டி20 கேப்டன்சிப் பொறுப்பில் இருந்து விராட் கோலி  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தான் கேப்டன்ஷிப் தொடருவதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்