இந்நிலையில் கோலியின் ஆட்டத்திறன் குறித்துப் பேசியுள்ள சஞ்சய் பாங்கர் “நாம் ஒரு பேட்ஸ்மேனாக இருக்கும்போது ஆட்டத்துக்கு நம்மைக் கொஞ்சம் ஒப்புக்கொடுக்க வேண்டும். பந்தை தேடி செல்லாமல் பவுலர் நம்மை நோக்கிக் கவனம் செலுத்தும் படி வரவழைக்க வேண்டும். கோலி போன்ற பெரிய பேட்ஸ்மேனால் அதை செய்ய முடியும். அவர் ரன்களே சேர்க்காமல் இல்லை. மூன்று இன்னிங்ஸ்களுக்கு முன்னால்தான் அவர் ஒரு அபாரமான சதத்தை அடித்துள்ளார்” எனப் பேசியுள்ளார்.