ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கள் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த போட்டியில் ஆர் சி பி அணி பேட் செய்த போது பதிரனா வீசிய பவுன்சர் பந்து கோலியின் ஹெல்மெட்டைப் பதம் பார்த்தது. இதையடுத்து அவருக்கு கன்கஷன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்து பதிரனா வீசிய பவுன்சரை கோலி சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அதற்கடுத்த பந்தையும் பவுண்டரிக்கு பறக்கவிட்டு ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார்.