வெற்றியை நோக்கி தென் ஆப்பிரிக்கா… திண்டாடும் இந்திய பவுலர்கள்!

வெள்ளி, 14 ஜனவரி 2022 (14:57 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் கையே ஓங்கி இருந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்கள் சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 212 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 101 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து ஆட்டத்தை முடித்தது. இந்நிலையில் இன்று தொடர்ந்து ஆடிவரும் தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடி வருகிறது. அந்த அணியின் இளம் வீரர் கீகன் பீட்டர்சன் அவுட் ஆகாமல் 71 ரன்கள் சேர்த்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றுகொண்டிருக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்