ஸ்பம்ப் மைக்கிடம் சென்று கோபத்தை வெளிப்படுத்திய கோலி!

வெள்ளி, 14 ஜனவரி 2022 (10:26 IST)
நேற்றைய போட்டியில் டீன் எல்கருக்கு கொடுக்கப்பட்ட ஒரு நாட் அவுட் இந்திய வீரர்களிடம் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் கையே ஓங்கி இருந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்கள் சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 212 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி விக்கெட்டை கொடுக்காமல் நிதானமாக ஆடியது. அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் அஸ்வின் பந்தை எதிர்கொண்ட போது காலில் வாங்கினார். அதையடுத்து எல் பி டபுள் யு கேட்கப்பட்டது. அதற்கு நடுவரும் அவுட் கொடுத்தார். டீன் எல்கர் ரிவ்யூ கேட்டார். ரிவ்யூவில் பந்து ஸ்டம்ப்புக்கு மேலே செல்வதாக காட்டப்பட்டது. இது இந்திய அணியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்த தங்கள் கோபத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தினர்.

உச்சகட்ட கோபத்தில் கோலி ‘உங்கள் அணியின் மீது கவனம் செலுத்துங்கள். எதிரணிகளை கவனிப்பதை நிறுத்துங்கள். ’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்