டெஸ்ட் போட்டியில் இன்று ஜடேஜாவுக்கு 25% அபராதம்- ஐசிசி அதிரடி

சனி, 11 பிப்ரவரி 2023 (17:55 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- ஆஸ்திரெலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் தொடர்  நாக்பூரில் நடந்தது.

இப்போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல்   நாள் ஆட்டத்தின்போது, ஜடேஷாவும், கேப்டன் ரோஹித் சர்மாவும் மைதானத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அப்பூஅது, தன் விரலில் ஏதோ ஒரு பொருளை வைத்துத் தேய்த்தார்.

இது அங்கிருந்த வீடியோவில் பதிவானது. ஜடேஜா ஒரு வலி   நிவாரணி கிரீமை பந்தில் தடவியதாக ஆஸ்திரெலியா மீடியாக்கள் கூறின.

இதன் மூலம் அவர் பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. ஆனால்,தான் பந்தைச் சேதப்படுத்தவில்லை என்று கூறினார்.

எனினும் ஐசிசி டெஸ்ட் விதிகளை மீறியதாக  ஜடேஜாவுக்கு போட்டியின் சம்பளத்தி 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வலி நிவாரண மருந்தை நடுவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா ஐசிசி கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்