ஐபிஎல் : பிரபல கிரிக்கெட் வீரருக்கு ரூ.12 லட்சம் அபராதம்

செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (20:37 IST)
டெல்லி அணியின்  கேப்டன் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 22, 16 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ஐதரபாத் அணி, குஜராத் டைட்டன்ஸ், சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

தற்போது  லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 34 வது லீக்கில் சன்ரைஸ் ஐதராபாத் அணி மற்றும் டெல்லி அண்க்கு இடைஅயே போட்டி நடைபெற்றது.

இதில், 20 ஓவர்களில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 144  ரன்கள் எடுத்தது. பின்னர் 14 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கல் முடிவில்  விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இப்போட்டியில், தாமதமாகப் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னருக்கு ரூ.12லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுளது.

ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை  மீறியதாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்