இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி மிகச்சிறப்பாக விளையாடி நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 202 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் அபிஷேக் ஷர்மா 61 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் சேர்த்தனர்.