மழையால் கைவிடப்பட்ட போட்டி… வெற்றி யாருக்கு? டி ஆர் எஸ் முறையில் முடிவு அறிவிப்பு

செவ்வாய், 22 நவம்பர் 2022 (16:13 IST)
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணி 19.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 75 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் இழந்து விளையாடும் போது மழை குறுக்கிட்டு போட்டி நிறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் டி ஆர் எஸ் விதிப்படி 9 ஓவர்களில் 75 ரன்கள் சேர்க்க வேண்டும். இந்திய அணியும் 75 ரன்கள் சேர்த்துள்ளது.

இதையடுத்து மழைக் காரணமாக போட்டி கைவிடப்பட்ட நிலையில் போட்டி டை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்