இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றிபெற்ற நிலையில் மூன்றாவது போட்டியை ஆஸ்திரேலியா போராடி சமன் செய்தது.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக இந்த போட்டியில் களம் இறங்கவில்லை. அறிமுக பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டையும், புவனேஷ்வர் குமார், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு 1 ஓவர் மட்டும் வீசப்பட்டது. இதில் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் விஜய் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.