கடின உழைப்புக்குப் பலன் கிடைத்தே தீரும்… காயத்தில் இருந்து மீண்ட புகைப்படங்களை பகிர்ந்த ஹர்திக்!

vinoth

வியாழன், 18 ஜூலை 2024 (07:33 IST)
நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது. இந்த தொடரை இந்திய அணி வெல்வதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக ஹர்திக் பாண்ட்யாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்திறன் அமைந்தது.

இந்த தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஹர்திக் பாண்ட்யா. மேலும் ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு அவரை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஆக்கியதும் ரசிகர்களுக்கு அவர் மேல் கோபம் வர காரணமாக அமைந்தது. ஆனால் உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடியதன் மூலம் தன்னை வெறுத்தவர்களை கூட நேசிக்க வைத்துவிட்டார். இதையடுத்து அவர்தான் எதிர்கால டி 20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் காயமடைந்த போது எடுத்த புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் வெளியிட்டு பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் “2023 உலகக் கோப்பை காயத்துக்குப் பிறகு கடினமான பயணம். ஆனால் அதற்கான நற்பலன் டி 2 உலகக் கோப்பையில் கிடைத்துள்ளது. எவ்வளவு உழைப்பை கொடுக்கிறோமோ, அவ்வளவு நல்ல முடிவு கிடைக்கும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்காமல் போகாது. அதனால் கடினமாக உழைப்போம். நம் உடல் பிட்னெஸ்ஸில் கவனம் செலுத்துவோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்