இந்திய டி 20 அணிக்கு தலைமை ஏற்கிறாரா பாண்ட்யா? பரபரப்பு தகவல்!

செவ்வாய், 17 மே 2022 (10:14 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு செல்ல உள்ள இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமை ஏற்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணியோடு நடக்க உள்ள டி 20 தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலி மட்டும் இல்லாமல் தொடர்ந்து விளையாடி வரும் ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோருக்கும் அந்த தொடரில் ஓய்வளிக்கப்படும் என தெரிகிறது.

அதனால் அங்கு நடக்கும் போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் தலைமையேற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்